Wednesday, November 18, 2015

A Call from SAHAJ MARG ASHRAM

MEDITATION FOR HUMANITY

Today until the 25th of December 2015

Respected Elders, dear sisters and brothers,

A rare opportunity has been bestowed upon humanity by the benevolent grace and generosity of the Hierarchy of Sahaj Marg Paddhati. All interested seekers of spirituality across the world can experience meditation with transmission, during the period from TODAY till the 25th of December 2015. It is necessary to explain our usual Heartfulness approach of comparing meditation with and without transmission. 

Let us participate in this grand enterprise, by naturally extending this invitation to all our relatives, friends, social and business contacts who may be inclined to meditate. During this period, anyone in the world, above the age of 15, who wishes to experience the benefits of meditation can connect directly to the Source and receive transmission any time during the day. Suggested text for an email invitation to your friends et al, is given below.  

From today until the 25th of December, please meditate with us daily, preferably at 6:30 a.m. or any other time during the day, from home or office, using the following simple steps. If you would like to learn more about this meditation, please let me know.
·         Sit comfortably with your eyes closed. Be relaxed.
·         Gently focus on your heart.
·         Start with a suggestion that the Source of Divine Light is within your heart.
·         Pray that the transmission is being received and is pulling your attention inward towards the heart.
·         Meditate for 20 - 30 minutes.

When the seeker contacts you, please invite them to complete the introductory process by:
a)    Contacting a local trainer (preceptor),
b)    Sending an email to contact@heartfulness.org or visiting www.heartfulness.org.
c)    Giving a missed call to 784-784-1111 in India.
In order for all of us to contribute to this initiative, please meditate at 6:30 a.m. local time every day, after making two suggestions:
“All sincere seekers of spirituality are being attracted towards Sahaj Marg.”
“All those who are meditating to receive transmission are connected to Master and are receiving transmission directly from the Source. All the necessary preparatory work is being completed by the Master.”
Please let everyone in your center be fully aware of this initiative and inspired to invite his or her loved ones to partake in this grand spiritual opportunity.
With prayers to beloved Master for his blessings,
Kamlesh D. Patel
 
 
 
 
 





Social Media
http://heartfulness.org/wp-content/uploads/2015/04/facebook.png
|
http://heartfulness.org/wp-content/uploads/2015/04/twitter.png
|
http://heartfulness.org/wp-content/uploads/2015/04/google_plus.png

Wednesday, November 11, 2015

குஞ்சுக் குருவி என்ன


கடந்த பத்து ஆண்டுகட்கு மேலாக ஆன்மீகப் பாடல்கள், குறிப்பாக, அம்மன் மீது மேடம் கவிநயா அவர்கள் எழுதும் பாடல்கள் உருக்காத தெய்வமும் இருக்க முடியுமோ என்று தான் எனக்குத் தோன்றும்.   அத்வைத வாதத்தில் ஒரு ஆன்மா தன்னுள் குடி கொண்டுள்ள பரமாத்மாவை நினைந்து உருகிப் பாடும் பாடலாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு பக்தன் தனது நினைவிலும் கனவிலும் என்றும் இருக்கும் அம்மன் அந்த தேவி கருமாரி, காசி விசாலாக்ஷி, மதுரை மீனாக்ஷி , புதுகை புவனேஸ்வரி, திருவிடைமருதூர் தையல்நாயகி அம்மன், காஞ்சி காமாக்ஷி எந்தக் கடவுள் ஆக இருப்பினும் அவள் அடி பேணி உலகத் துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆவல் அவரது ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுகிறது.
இந்த பாடலும் அந்தச் சிறப்புக்கு ஒரு உதாரணம்.

Saturday, November 7, 2015

வாடும் மலரான வாழ்க்கை

பாவலர் புலவர் சசிகலா அவர்களின் வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் அதுவே இனிய கவிதையாக பரிணமிக்கிறது.

அதை நான் இங்கு பாடுகிறேன்.  பின்னூட்டம் இட்டவர் ஊமைக்கனவுகள் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். அவர் வலை இது.  அங்கு நெளியும் பாம்பின் அசைவுகளில் மனம் செல்லாமல் தடுக்கிறது சசிகலா அவர்களின் வலையில் அவர் இட்ட பின்நூட்டக்கவிதை.

இந்தக் கவிதை ஒரு முறை அல்ல பல முறை படித்தேன்.
தேனாக இனிக்கிறது.

சந்தம் இங்கே சுந்தரமாக அல்லவா இருக்கின்றது.
இல்லை. அல்வா போல் இருக்கிறது.


தேடி அலைகின்ற மகவை அறியாமல்
      துரத்தும் தாயான சிந்தை!
   தெருவில் திரிந்தாலும் தினமும் அழுதாலும்
      வெறுக்கத் துணியாத விந்தை!
வாடும் மலரான வாழ்க்கை அதில்கொஞ்சம்
      வாசம் நிறைக்கின்ற சந்தம்!

   வற்றிக் கிடக்கின்ற வெற்றுச் சுனையூறி
      வறளும்…! சொல்லுக்கும் பஞ்சம்!
கோடி கவிகொண்ட தமிழின் கூட்டிற்குள்
      குலவும் தென்றலின் கீதம்,
   கொட்டும் மழைமேகக் குளிராய்க் கண்பட்டுக்
      குழையும், மனமுன்றில் மோதும்!

பாடிக் கடக்கின்ற பொழுதை வசமாக்கும்
      பாடம் அறிந்தீர்‘அப் பாங்கை
   “பாவம்…! நீயென்று படிக்க?“ எனக்கேட்டுத்
      தேங்கும் தமிழென்னில் ஏங்கும்!!!

Wednesday, October 21, 2015

ஒரு தாலாட்டு

ஒரு பூந்தோட்டத்துக்குள்ளே எல்லாமே மலர்கள் தான்.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு வண்ணம், ஒரு வாசம்.

அந்த வாசத்துக்கு இசைய, வண்ண மலர்களைத் தொடுப்பதே ஒரு கலை.

அதே போல தமிழ் மொழி நம் மனதை ஈர்த்து அதனுள்ளே செல்லும்போது எத்தனை எத்தனை சொற்கள்

எல்லாமே முத்து, மரகதம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், வைடூரியம்.

அவைகள் எல்லாவற்றையும் அழகுற கோத்து ஒரு மாலை ஆக கொண்டுவருவதில் தான்

ஒரு கவிஞனின் ஒரு அதீத புலமை தென்படுகிறது.

இரண்டு நாட்கள் முன்னம், நான் வலை நண்பர் சசிகலா அவர்கள் தளத்திலே ஒரு தாலாட்டு பாட்டு.

(படம்: ஹிந்து நாளிதழ்) நன்றி.
அதைப் பாராட்டிய அனைவருமே உள்ளம் நெகிழ்ந்து போன காட்சி அங்கே. .
நானும் ஒரு பின்னூட்டம் எழுதினேன்.

இதுவரை மூன்று ராகங்களில் நீலாம்பரியில் துவங்கி பாடிவிட்டேன்.
இன்னமும் மற்ற ராகங்களிலும் பாடு பாடு என்று சொல்கிறது இந்த பாடல்.
குழந்தையோ இந்தப் பாடலின் முதல் வரிக்கே தூங்கி விட்டது.

உங்களுக்குப் பிடித்த தர்பாரி கானடா ராகத்திலும் மிக நன்றாக வருகிறது.


இதை இயற்றிய சசிகலா மேடம் அவர்கள்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திட
புவியெங்கும் பெயர் ஒலிக்க
புவனேஸ்வரி அம்மன் அருள் புரிவார்.

சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
நீங்கள் கேட்டவுடன் தாத்தா பாட வந்துவிட்டார் பாருங்கள்.
சுப்பு தாத்தா வலைஉலகப்பாடகர் அவர் பாடி உற்சாகம் படுத்தும்விதம் மிகவும் மகிழ்வாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது எங்களுக்கு. அவருக்கு எனதுமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

 இந்தப் பாடலை நான் இதுவரை ஒன்பது ராகங்களில் பாடினேன். அற்புதமாக இசையுடன் இணைந்து வல்ல இனிய சொற்கள். 

இன்று என் குரல் ஒத்துழைக்க வில்லை. இருப்பினும் முனைந்து இதை இரு ராகங்களில் இணைத்து பாடி இருக்கிறேன்.  

வனப்பும் சிறப்பும் இந்தப் பாடல் வரிகளையே சேரும். 

 


Saturday, October 17, 2015

இனிய அன்னை சிம்ம வாகினி.

இனியா அவர்கள் காவியக்கவி வலைத்தளத்தில் இட்ட ஒரு பின்னூட்டமே ஒரு இனிய கவிதையாக பரிணமிக்கிறது. அதை நான் "நாத நாமக் கிரியை " என்னும் ராகத்தில் பாடுவதை கேளுங்கள். +Iniya Kavithai
நீங்கள் இங்கே பார்ப்பது நான் பார்த்து அதிசயித்த ஒரு அற்புத கோலம்.
இவர்கள் தளத்திற்கு சென்று பாருங்கள்.
நன்றி ஸ்னோ வைட் சோனா அவர்களுக்கு.
Incredibly Beautiful Kolam




Friday, October 16, 2015

Thursday, October 15, 2015

இளைய நிலா இளமதி அவர்களின் கவிதை. துர்க்கை அம்மன் வழிபாடு.

www.mykolam.blogspot.com


















நவராத்திரி இரண்டாம் நாள் வலை தனை அலங்கரிப்பது 
துர்க்கை அம்மன் வழிபாடு. 
என்ன ஒரு அழகான கவிதை இது. !!
எங்குமே உன்னருள் ஏந்திடும் பொன்னெழில்
    என்றுமே காணுகிறேன்!
  ஏற்றமே நான்பெற இன்னலும் நீங்கிட
    என்னையும் காத்திடுக!

Tuesday, October 13, 2015

துர்க்கை அம்மன்

உலக ம் முழுவதும் அறியும் வலை நண்பர் திருமதி துளசி கோபால் அவர்கள் வீட்டில் துர்கை அம்மன் பிரதிஷ்டை செய்து நவராத்திரி விழாவினை துவங்கி இருக்கிரார்கள்.

கவிநயா அவர்கள் அதற்கு ஏற்றாற்ப்போல் பாடல் இயற்ற,

அதை சுப்பு தாத்தா பிஹாக் ராகம் என்று நினைத்துக்கொண்டு பாடுவதுடன்
இந்த வருடம் நவராத்திரி விழா துவங்குகிறது. 

Thursday, September 24, 2015

முருகா முத்தம் தருகவே

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

 என்று முருகனை ஏங்கி உருகும்  பாடல் உண்டு.
இங்கோ ,
தனது வயிற்று வலி தீர, முருகனை வேண்டும் ஒரு வைணவர்

முருகா எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு, ஆனா, உன் முத்தத்துக்கு 
விலை உண்டோ !

 என எழுதி இருக்கிறார். .

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பகழிக் கூத்தர் எழுதியது.

உரை தந்தது:
 வலை நண்பர்: ஜிரா.https://gragavanblog.wordpress.com/2015/09/24/priceless-kiss/
அவருக்கு எனது நன்றி.


கத்தும் தரங்கம் எடுத்தெறியக் 
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
 கரையில் தவழ்ந்து வாலுகத்திற் 
கான்ற மணிக்கு விலையுண்டு


 (தரங்கம் – கடல், சூல் – கரு, உளைந்து – வேதனைப் பட்டு, வாலுகம் – வெண்மணல் (வால் என்றால் வெண்மை நிறம்), கான்றல் – சொரிதல்)

தத்தும் கரட விகடதட 
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை 
தரளம் தனக்கு விலையுண்டு


 (கரடம் – மதம், விகடம் – உன்மத்தம் பிடித்து பார்ப்போர் நகைக்கும் வகையில் ஆடுதல், தடம் – மலை, தந்தி – யானை, மருப்பு – கொம்பு/தந்தம், தரளம் – முத்து)

தழைத்துக் கருத்து வளைந்தமணிக் 
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் 
குளிர்முத் தினுக்கு விலையுண்டு



 (சாலி – நெற்பயிரின் வகை. சென்னையின் சாலிகிராமம் நெல்வயல்களாக இருந்ததால் அப்பெயர் பெற்றது)

கொண்டல் தகு நித்திலம் தனக்கு
 கூறும் தரமுண்டு உன் கனிவாய்
 முத்தம் தனக்கு விலையில்லை
 முருகா முத்தம் தருகவே 
முத்தம் சொரியும் கடலலைவாய்
 முதல்வா முத்தம் தருகவே. 


(கொண்டல் – மேகம், நித்திலம் – முத்து, முத்தம் – முத்து, கடலலைவாய் – திருச்செந்தூர்)

இதைக் கேட்ட முருகப் பெருமான் தனது இரத்தின மாலையைக் கழட்டிக் கொடுத்ததாக சரித்திரம் பேசுதாம் .

இந்தப் பதிவில் பின்னூட்டம் தந்த எனது வலை நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் சொல்வார்:
பாடலில் 5 முத்து-முத்தங்களைச் சொல்லும் கவிஞர்!
1. கடல் முத்து
2. யானைத் தந்தம் நுனி முத்து
3. நெல் முத்து
4. மழை முத்து
5. முருகன் முத்து(ம்)


இதையே நம்ம ஊரு புலவர்கள்
குறிப்பா மரபு சாரா கவிஞர் பலரும்
 எழுதினா
எப்படி எழுதுவாங்க. ?
+sasikala2010eni@gmail.com
ஆனா இவங்க எல்லாரும் பக்திப் பாடல்
பாடுவாங்களா அப்படின்னே தெரியல்லையே...

பாரீஸ் புலவர் பாரதி தாசன் அவர்கள் கிட்ட ஒரு அப்பீல் பண்ணிப் பார்ப்போமா ??  ஆசிரியர் சொன்னால் மாணவர்கள் கேட்பார்கள்.
அது  அந்தக் காலத்துலே
அப்படின்னா சொல்றீங்க...!!!


Wednesday, September 23, 2015

வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் இனிய கதையே. இனிய சுவையே

என்னாடா ஒரு கொண்டாட்டமா இருக்குன்னு கொட்டகைக்குள்ளே நுழைஞ்சு சுப்பு தாத்தாவும் மீனாக்ஷி பாட்டியும் எட்டிப் பாத்தாங்க..ஆஹா.!! துளசி கோபால் க்கு இன்னிக்கு பிறந்த நாள் . அதான் இந்த அமக்களம். குதூகலம்.
ஸ்ரீமதி துளசி கோபால், திரு கோபால் இருவருக்கும் எங்கள்
ஆசிர்வாதங்கள்.
+Tulsi Gopal
அன்று மைலாபூர் உங்கள் அகத்துக்கு பக்கத்தில் நடை பெற்ற 60வது ஆண்டு விழாவில்

அக்கார வடிசல் சாப்பிட்டது இன்னமும் இனிக்கிறது.

துளசி கோபால் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு பக்கமும்
இனிய கதையே.  இனிய சுவையே 

+revathi 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன் பிறவா சகோதரி திருமதி வல்லி நரசிம்மன் அவர்களுக்கு எங்களது நன்றி. அவரது பக்கத்தில் வாழ்த்துச் செய்தி கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.   அங்கும் சென்று பார்க்கவும். 

. HEARTY GREETINGS TO MADAM THULASI GOPAL AND GOPAL SIR ON THE EVE OF BIRTHDAY CELEBRATIONS.

பிறந்த நாளை ஒட்டி ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்.



ALL OUR BEST BLESSINGS.

Sunday, September 20, 2015

இந்த பேஸ் புக்

 பேஸ் புக் கா
 பேஸ் லுக் கா ?


லுக்  கிட்டு போறவங்க சிலர்.
புக் பண்றவங்க சிலர்.
சிக் எனப் பிடித்துக்
கொள்பவர்களும் இருக்காங்க.
சிலரோ
கிக் பண்றாங்களே !!

என்னத்தை சொல்வது !!

எனி வே,
ஐ ஆம்
சிக் அபௌட் திஸ்
புக்.
 பெட்டர் வீ கால் இட்
பேஸ் லஸ் குக்.
எங்கள் ப்ளாக் லே என்னோட பின்னோட்டம். இதுவே.

+Balu Sriram
+Gowthaman K G 

Saturday, September 19, 2015

இளைய நிலா விநாயகன்

YOUR SONG IS OK.YOUR VELLA  KOZHUKKATTAI OK. நேத்திக்கே விநாயக சதுர்த்தி முடிஞ்சு போச்சு, BUT U CAME LATE. NEXT TIME U ASK THATHA TO SING IN TIME. YES, MY LORD!


சரி விநாயகா, லேட்டா வந்தது தப்பு தான்.
 இப்ப நான் பிராயச்சித்தம் ஆ என்ன செய்யணும்?

ஒன்னும் ஸ்பெசல் ஆ வேண்டாம்.
உன் என். ஆர். ஐ. பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம்
இந்த சைட்டுக்கு போய், 
தமிழ் வலைப்பதிவர் மா நாட்டுக்கு ரிஜிஸ்தர் செய்யச் சொல்.


ஐயா......  நாங்க வெளிநாட்டு லேந்து.......

சொன்னதைச் செய்.

ஓம் மகா கணபதியே நமஹ

Wednesday, September 16, 2015

மூன்று பெண்மணிகள்

இன்று நான் படித்த வலைப்பதிவுகளில் மூன்று
என்னை மட்டும் அல்ல
என் போன்றவர்களை சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன்.
மூன்று பெண்மணிகள். முதலிலே ஒரு மொழி பெயர்ப்பாளர், அடுத்து ஒரு திக்கற்ற பெண்ணின் தாய், மூன்றாவது ஒரு அன்னை.
+mohan gurumurthy
முதலாவது திரு மோகன்ஜி அவர்கள் வலைப்பதிவு. 
திருமதி கீதா மதிவாணன்  அவர்களின் "என்றாவது ஒரு நாள்" எனத் தலைப்பினைக் கொண்ட அண்மைய மொழி ஆக  நூலின் ஒரு கருத்துரையாக இந்த பதிவு இருக்கின்றது.

ஒரு மொழிப்பெயர்ப்பு என்றால் அந்த ஆக்கத்தைக் கையாளுபவர் திறன் குறித்தும், அதைப் படிப்பவர் மன நிலை, அவர்களுடைய மன நிலைபாடுகள்,
குறித்தும் இவர் சொல்லும் கருத்துக்கள் எல்லோரையுமே குறிப்பாக, மொழி பெயர்க்கும் ஆற்றல் படைத்தோருக்கும், அந்நிய இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வலர்களுக்கும் அவசியம்.

இதைப்படித்த எனது பின்னூட்டம் இது.

மொழியாக்கத்தினை படிப்பவரின் மனவோட்டமும் முன்முடிபுகளும் கூட இங்கு கவனம் கொள்ளத்தக்கது. ///

பல நேரங்களில், மொழி பெயர்ப்பு நூலை படிப்பவர் முன்னமேயே அதன் மூலத்தையும் படித்திருக்கும் சாத்தியக் கூறுகளும் உண்டு.
இரண்டாவது, மொழி பெயர்ப்போர் பெரிதும் தாம் மொழி பெயர்த்திடும் நூலினை அம்மொழி பேசப்படும் மக்கள் தம் இயல்பு நடையில் சொல்லாது, தத்தம் சொற்கட்டுத் திறனைக்  காட்டிடவே செய்கின்றனர்.
மூன்றாவது, மொழி பெயர்ப்பில் தனது முன் மன உறுதிப் பாடுகளை நுழைத்து விடுகின்றனர். மொழி பெயர்க்கவேண்டும், அதே சமயம் தமது நிலைப்பாடுகளையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர் உண்டு. இவர்களின் மொழி பெயர்ப்பில் இவர்களது மொழி வல்லமை தெரிகிறதே தவிர, மூலத்திற்கு அவர்கள் செய்யும் நீதியாக என்னால் கருத இயலவில்லை.
இதைத் தவிர, சிலர் இந்த "செப்பிடு வேலையில்" தன்னாலும் முடியும் என்று காட்ட வேண்டும் அல்லது தனக்கும் அந்த மொழியிலோ அந்த நூலிலோ பாண்டித்தியம் உண்டு எனப் பிரதர்சனம் செய்ய ஆவலுற்று, அந்த நூலில் முன்னமேயே ஏதேனும் இரண்டு மூன்று மொழி பெயர்ப்புகளைப் படித்து விட்டு , தனக்குப் புரிந்த  வகையில், எதை மொழி பெயர்ப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மொழியே தெரியாத நிலையில் கூட , தான் மொழி பெயர்த்ததாக கூறும் நிலை பார்க்கிறேன். இவர்களைக் கண்டால், மனம் இவர்களைப் பார்த்து வருத்தம் தான் கொள்கிறது.
இதைப் பற்றி இன்னமும் சொல்ல இரண்டாயிரம் சொற்கள் இரண்டு நாட்கள் வேண்டும்.
நீங்கள் கருத்துரை வழங்கி இருக்கும் திருமதி கீதா அவர்களின் நூலை வாங்கியேனும் படிக்கவேண்டும் என்ற ஆவலைக் கிண்டி  இருக்கிறீர்கள் .
வழக்கம் போல, உங்களது பதிவு
வாழை இலை விருந்து.
சுப்பு தாத்தா.

******************************************************************************************
அடுத்ததாக, நிலாமகள் என்னும் பறத்தல் பறத்தல்-நிமித்தம் என்னும் வலைப்பதிவில் ஒரு காட்சி. 
 +Nilaa maghal 
 +நிலா மகள் 
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்ந்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம் சாலேகம் சாரா நட -முத்தொள்ளாயிரம் 50

 இந்தக் காட்சி முத்தொள்ளாயிரத்திலே வரும் காட்சி. பதிவரோ அதற்கென
ஒரு கதை ( கற்பனை தான் என நினைக்கிறேன்.) புனைந்து இருக்கிறார். அதைப் படிக்கும்போது கண்கள் குளமாகின என நான் சொல்வது மிகையல்ல.
நீங்கள் அந்தக் கதையைப்ப்டடிக்கவேண்டும்.

இந்தப் பதிவுக்கு நான் இட்ட பின்னோட்டம் இது.

விதி எனச் சொல்லி ஓடிப்போவதா ?
மதி இழந்த செயலது. நான் என் செய்வேன் எனச் சொல்வதா?
பதி என்றவன் தன்னைக்
கதியற்று நிற்கச்செய்து
நிதி கொண்டு வா இல்லையேல்
நீ இல்லை எனச் சொல்கிறானே...
நீதி எங்கே ? மனு
நீதிச் சோழா நீ வந்து
சொல்.
சுப்பு தாத்தா. 
 ***********************************************************************************
மூன்றாவதாக,
அம்மாவை நினைவு கூர்ந்து எழுதுவோருக்கு பஞ்சமில்லை.
அண்மையிலே விஜய் டி.வி. யில் நீயா நானா வில் பங்கு எடுத்துக்கொண்ட ஒரு தாய், இந்த மாதிரி அம்மாவைப் புகழ்வதில் ஒரு செயற்கைத் தன்மை இருக்கிறதோ என்று மட்டுமல்ல, அம்மாவை ஒரு காமெடி மாதிரி ஆக்கிவிட்டார்களோ என்றும் ஐயப்பட்டார். அந்த அளவுக்கு அம்மாவை பாலாபிஷேகம் செய்கிறோம் என்கிறார்.
அப்படிப்பட்ட சூழலில் தனது அம்மாவை அல்ல, தனது கணவரின் அம்மா,
மாமியாரைப் போற்றும் ஒரு பதிவு "ஒரு அருமை அன்னையின் தினம் " என்று ஒரு தலைப்பு உடன் எழுத , மிக்க பெருந்தன்மை வேண்டும். அப்படி தனது மருமகளால் போற்றப்படவேண்டும் என்றால், அந்த மாமியார் எத்துணை பெருந்தன்மை, கருணை உள்ளம் படைத்தவராக இருக்கவேண்டும்.!!

உண்மையிலே பார்த்தால் மாமியார் கொடுமை என்பதே  ஒரு பர்செப்ஷன். எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் மிகவும் சுமூகமான உறவு காணப்படுகிறது.
+revathi narasimhan
மாமியாரைப் புகழும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் பதிவு இங்கே. அதற்கு எனது பின்னோட்டம் இது.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என நினைத்த, நினைக்கின்ற, நினைக்க இருக்கும்
பெண்மணிகள் எல்லோருமே
சிறந்த பெண்களாக, குடும்பத் தலைவிகளாக, மாமியார்களாக,
விளங்குகிறார்கள்.
இவர்கள் "தெய்வத்துள்" போற்றப்படுவது
நாமும் போற்றுவது இயல்பே.
பாசம் என்ற சொல்லை ஒரு சிறிய வளையத்துக்குள் பதுக்காது ,
பாச வலைதனை பரப்பி எல்லோரையும் அணைக்கையில்,
ஒரு பையனுக்குத் தாயார் என்ற நிலையில் இருந்து
பத்மாக்ஷி தாயார் ஆகிவிடுகிறார்.
சுப்பு தாத்தா. 
 
மாமியாரோடு இருக்கும் மருமகள் யாவருமே இந்தப் பதிவினைப் படிக்கவேண்டும். நீங்கள் இது போன்ற ஒரு பதிவு எழுதவேண்டும் என நான் சொல்லவில்லை. இது போன்ற மாமியாராக, நீங்கள் ஒரு எதிர்காலத்தில், பிரகாசிக்கவேண்டும்.

Saturday, September 12, 2015

ஆதலால் பிறவி வேண்டேன்

இன்று காலை வலைச்சரத்தைப் படித்ததே பெருமாள் கிருபை. அரங்கனின் அருள் எனச் சொல்லவேண்டும். 

எனது வலை நண்பர் திருவாளர் ரிஷபன் அவர்கள் பெரிய ஜீயர் என்று போற்றப்படும் ஸ்ரீ மணவாள மா முனிகள் பற்றி எழுதியதைப் படித்தேன். 
பின்னே அவரது ஒரு பாசுரத்தையும் என்னால் இயன்றவாறு பாடினேன்.

நீங்கள் இனி படிப்பது ரிஷபன் அவர்கள் எழுத்து.
இருக்கும் இடம். வலைச்சரம்.www.blogintamil.blogspot.com
 ****************************************************************************
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்


பெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே


ஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள்.  வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார்.  இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார். 

******************************************************************************
பாடுவது சுப்பு தாத்தா.
கேட்பது:  ???????




ரிஷபன் சாருக்கு நன்றி என சொல்லலாம் என்று பார்த்தேன்.
இருந்தாலும், ரங்கனே ரிஷபனாக வந்திருப்பார் சொல்லி இருப்பார் என்று தோன்றியது.
ரங்கா ரங்கா
நான் அரங்கம் வரும் நாள்
நின்னடி சேருங்கால்,
நன்றி ஒன்றல்ல, இரண்டல்ல,
நான் கடைத்தேறும் வரை
சொல்லிக்கொண்டே இருப்பேன்.

+Rishaban Srinivasan

Friday, September 11, 2015

2015 10 11 ???


புதுகையிலே முனைவர் முத்து நிலவன் அவர்கள் தலைமையிலே
தமிழ் பதிவர் மா நாடு
நடைபெற உள்ளது.

அதை வாழ்த்தும் வகையிலும் வர இருக்கும் அனைவரையும்
உளமார வரவேற்கும் வகையிலும்
அங்கே என்ன பல நல்ல விஷயங்கள்
நடக்க இருக்கின்றன என்பதை
நமது நண்பர்
திரு கில்லர்ஜி
ஒரு பாடல் மூலம்
வர்ணிக்க
அத
சுப்பு தாத்தா
பாடுகிறார்.

யாரு வருவாங்களோ
இத எல்லாரும் பாத்து கேட்டு ரசிப்பாங்க.

+

Conference at Pudukottai 11th october 2015

Sunday, September 6, 2015

கொத்துமலர் பூங்கொடியே

காவியக்கவி இனியா அவர்களின் நாமகள் துதி. 
அற்புதம். 
ஹம்சத்வனி ராகம் தொனிக்க பாடி இருக்கிறேன்.

காவியக்கவி இனியா அவர்கள் வலைக்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இங்கே சொடுக்குங்கள். 

தமிழ் வலைப்பதிவாளர் மாநாடு 11.10.15 அன்று புதுக்கோட்டை யில் நடை பெற உள்ளது. அதில் பங்கு பெற இங்கு பதிவு செய்யுங்கள். 

கோகுலாஷ்டமி, பூஜை செய்தபின், உப்பு சீடை , வெல்ல சீடை சாப்பிட இங்கே பதிவு செய்யுங்கள்.




Saturday, September 5, 2015

யாதவன் நம்பி பாடும் மாதவன் மது சூதனன்








அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!
திரு யாதவன் நம்பி
http://kuzhalinnisai.blogspot.com/

சுப்புதாத்தா பாடுகிறார்.
ராகம் சிந்து  பைரவி.
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

யாதவன்   நம்பி பாடும் மாதவன் மது சூதனன்
எல்லோருக்கும் அருள் புரிவான்

Wednesday, September 2, 2015

நாமகளே நல்ல தமிழ் நாவினிலே ஊறி வர....

இனியா அவர்கள் தனது வலை காவியக் கவி யிலே தமது நாமகள் கவிதையை இட, நாமும் அதைப் பாடி மகிழ்ந்தோம்.

இனியாவுக்கு எமது இனிய நன்றி.

நாமகளே நல்ல தமிழ் நாவினிலே ஊறி வர....



Monday, August 31, 2015

குதிரை சாணியும் சீரக கஷாயமும்

எனது வலை உலக நண்பர் திரு ஸ்ரீ ராம் அவர்களின் எங்கள் ப்ளாக் லே
வெள்ளை அப்பம் எப்படி செய்வது என்று
+Balu Sriram
ஒவ்வொரு ஸ்டப் ஆக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

நாமும் செய்வோம் என்று சுப்பு தாத்தாவும் வெள்ளை அப்பம் செய்ய
ஆரம்பித்தார்.

என்ன நடந்தது என்பதை ஒரு பின்னூட்டம் ஆக போட்டு இருக்கிறார்.

நீங்களும் அதை படியுங்கள்.

படிப்பதற்கு முன், எங்கள் ப்ளாக் சென்று வெள்ளை அப்பம் செய்யும் முறை என்ன என்பதை படிக்கவேண்டும்.

(சீரகம் என்ன கலர் என்று அண்ணனுக்கு போன் செய்து கேட்டேன். குதிரைச்சாணி கலர் என்றார்//

அவசர அவசரமாக எதிர்த்த கடையிலே சீரகம் வாங்க போனேன். எங்கள் வீட்டிலே சீரகம் பொடியாகத் தான் இருந்தது. ஒரு ஸ்பூன் சீரகப் பொடி ஒரு ஸ்பூன் சீரக த்திற்கு மேலாக இருக்கும் என்று மனசு உறுத்தியது.

அடுத்து விதி என்னைப் பார்த்து சிரிக்கிறது.


கடைக்காரன் கொடுத்த சீரகம் குதிரைச் சாணி கலர் இருக்குமே ..நீ கொடுத்தது அப்படி இல்லயே என்றேன். அவன் என்னை ஒரு தினுசா பார்த்துவிட்டு,


ஆம்பளக் குதிரையா, பொம்பளக் குதிரை சாணம் வெவ்வேறு கலர் லே இருக்கும். தெரியுமா என்கிறான்.


வெளிர் க்ரே கலர் லேந்து டார்க் கலர் க்ரே வரைக்கும் நார்மலா இருக்கும். அதற்கு போடற கொள்ளு என்ன கலரோ அதைப் பொறுத்தது. எதற்கும், நீங்கள் குதிரை ஒன்றைப் பார்த்து விட்டு , அந்த சாணத்தைப் பார்த்து விட்டு சீரகம் வாங்குங்கள். என்றான்.


அதுவும் சரிதான். குதிரை எங்கே பார்க்கலாம் என்றேன்.

அப்பறம் தான் எனக்கே தோன்றியது.

கிண்டி ரேஸ் கிளப்பில் பார்க்கலாம் என்று தோன்றியது. உடனே வடபழனி பஸ் ஸ்டாண்ட் சென்று 80 பஸ் ரூட்டில் சென்று கொண்டு இருந்த பொது,



ஜாபர்கான் பேட் அருகே ஒரு குதிரை வண்டி யை பார்த்து உடனே அங்கு இரங்கினேன்.



நான் வந்த விஷயத்தை சொன்ன உடன் அவன் அதுக்காத்தான்யா டாக்டரைப் பார்க்க வந்தேன்.என்றதும் ,

எனக்குப் புரியல்ல, ஆனா

 அப்ப தான் கவனிச்சேன். அந்த இடம் வெடிரினரி டாக்டர் டிஸ்பென்சரி.

என்ன ப்ராப்ளம் என்றேன்.

குதிரை வயிறு சரியா இல்லேன்னு சீரக கஷாயம் கொடுத்தேங்க. அதுலேந்து ஒரே டயரியா வா இருக்குது என்றான்.

சீரகம் வாயுத் தொந்தரவுக்கு. சீரணம் சமனப்படுத்தும். ஆனா நீ சொல்றது வராதே.. என்றேன்.

நீங்க சொல்றது சரிதாங்க...குதிரை சீரக கஷாயம் குடிக்கணும்லே. அதுக்காக, எதிர்த்த கடைலே

எதிர்த்த கடைலே என்ன ? என்று ஒரு அச்சத்துடன் கேட்டேன்

வெள்ளை அப்பம் அஞ்சு அந்த ஆப்ப கடைலே வாங்கித் தந்தேங்க ....


ஒரே ஓட்டமாக திரும்ப ஓடி வந்ததில் மூச்சு இறைக்கிறது.

இதுக்கு அந்த தேப்லா  பெட்டர்.
+Geetha Sambasivam

மேடம் சொன்னது

Saturday, August 29, 2015

நாமகளின் நற்கருணை



இளையநிலா அவர்களின் இனிய பாடல் இது. அவர்கள் வலைக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

இவரது இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

Wednesday, August 5, 2015

சந்தங்கள் பல பாடி

வலைச்சரத்த்தில் பெரும்புலவர் பாரதி தாசன் பிரான்சு நாட்டவர் புதுவையிலே பிறந்தார் தமிழகத்தின் சிறப்பையும் வனப்பையும் பொலிவையும் தனது கவிதைகளால் வடிக்கிறார் எனின் அவரது இடுகைகளுக்கு தரப்படும் பின்னூட்டங்களுக்கு குறைவில்லை அவற்றில் சொல் அழகும் பொருள் அழகும் ஒன்றை ஒன்று விஞ்சிக்கொண்டு செயல்படும் வண்ணம்.
+sasikala2010eni@gmail.com
சசிகலா அவர்கள் இயல்பிலேயே எதையுமே கவிதையாகச் சொல்லும் திறன் படைத்தவர். இவரது பின்னூட்டம் ஒன்று கவிதையாக அங்கு வெளியிடப்பட்டு உள்ளது.

அதை பாடுவதில் என் உள்ளம் அடையும் உவகைக்கு ஒரு எல்லையும் இல்லை.


சந்தங்கள் பல பாடி

Saturday, June 27, 2015

ஷிர்டி சாயீ பஜன்.


 ingu ungal paadal ketkalaam. raakam.theva gandhari.

இனியா காவியக்கவி இயற்றிய பாடல் இது.

இதை முதலில் மோகன ராக சாயலில் பாடினேன்.

அற்புதமான கவிதை இது.

இதை இன்னொரு ராகம் தேவ காந்தாரி , அதிலும் பாட மனம் விழைந்தது.

இனியாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சாயியின் மகிமை அறியவும்
அவர் அருள் வேண்டும்.

இங்கேயும் இந்தப் பாடல் ஒலிக்கிறது. 

வரும் 
வழியில் ,
தமிழ் வலையில் 
நான் கண்ட பின்னோட்டம் இது. சாரி, பின்னூட்டம். 
நான் எழுதியது அல்ல.  எந்த பதிவுக்கு ? என்றும் சரியாக நினைவுக்கு வரவில்லை. 


  கண்ணால் காணாத ஒரு ஆலமரத்தை ஒரு விதையைக் காட்டி அதற்குள் மறைந்திருப்பதாய்ச் சொன்னால் எப்படி நம்பக் கடினமானதோ அப்படிப்பட்டதுதான் அவரின் இருப்பும். 

மஹா சமுத்திரத்தில் காய்ச்சாமல் கோடி கோடி டன்களாய் மறைந்திருக்கும் உப்பைக் கண்ணால் காணமுடியாது- அதன் சுவையை நாக்கால் உணர்ந்தாலும். தீவட்டியின் துணையோடு ஒரு பொருளைத் தேடுவது போல 

ஞானத்தினால் அந்த குணங்களைத் தேடுகிறோம். தேடியது கிடைத்தபின் தீவட்டியின் துணை தேவையில்லை.

 இல்லை, கிடைக்காது, முடியாது போன்ற வார்த்தைகளை விட உண்டு, கிடைக்கும், முடியும் என்ற வார்த்தைகள் தரும் உற்சாகமும், நம்பிக்கையும் அளவிடற்கரியவை. 

நாம் தேடுவது எது, எதற்காக என்பதன் விஸ்தீரணத்துக்கு ஏற்ப அந்தப் பயணம் முடிவடைகிறது அல்லது நீள்கிறது. 

 என் சொற்ப அனுபவத்தில் இருப்பதிலேயே விற்பதற்கு மிகக் கடினமான பொருள் ஆயுள் காப்பீடு தான். கண்ணால் காணமுடியாதது என்பதாலேயே அதன் அருமை யாருக்கும் அத்தனை எளிதில் புரியாது.



 அன்பு,பரிவு,மன்னிப்பு,நன்றி பாராட்டுதல், பசி நீக்குதல் இன்னும் இதுபோன்ற பல மேன்மையான குணங்களை யாரெல்லாம் ப்ரதிபலிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கடவுள். 

 நாம் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்லவருகிறோம் அப்பாதுரை. உண்டு என்று நான் துவங்குகிறேன். இல்லை என்று நீங்கள் துவங்குகிறீர்கள். 

நாமிருவரும் சந்திக்க நேரும் புள்ளியில் இருவரிடமும் அந்த இரு வார்த்தைகளும் கூட உதிர்ந்துபோய் விடும் நிலையில் தரிசிக்கும் அனுபூதிதான் அந்த மறைபொருள்
 *************************************************************************

அநுபூதி என்ற சொல்லுக்கு 
கந்தர் அனுபூதியிலே அருணகிரி நாதர் சொல்வதை 
நன்றியுடன் நினைக்கிறேன்.  ( நன்றி: கௌமாரம் .காம்.)

 உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

......... பதவுரை .........

உல்லாச ... மங்காத உள்ளக் களிப்பும்,

நிராகுல ... துன்பமற்ற நிலையும்,

யோக ... யோக சொரூபனும்,

இத ... நன்மை பயப்பவனும்,

சல்லாப விநோதனும் ... அடியார்களிடம் இனிமையாகவே பேசி
திருவிளையாடல் புரிபவனும்,

நீ அலையோ ... நீ தானே முருகா,

எல்லாம் அற ... உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ,

என்னை இழந்த நலம் ... நான் எனும் ஜீவ போதம் இழந்து
அனுபவிக்கும் பேரின்ப நிலையை,

சொல்லாய் ... மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும்.

......... விளக்கவுரை .........

சகல பற்றுகளையும் கடந்த நிலையை 'எல்லாம் அற' என்று
குறிப்பிடப்படுகிறது. இதில் அகப் பற்று, அதாவது உயிர் மேல்
வைத்திருக்கும் பாசம், புறப் பற்று, என்னுடைய இல்லம் 'என்னுடைய
குடும்பம்' முதலிய உலக பசு பாச தொந்தங்கள் அடங்கும். இவை
நீங்கினவுடன் நான் .. எனது என்னும் ஜீவ போதத்தை இழந்து
இறைவனுடன் கலந்து நீவேறெனாதிருக்க நாவேறெனாது இருக்கும்
நிலை அடைந்து, ஜீவன் முத்தி நிலை அடையப்பெற்றால் அந்த
அனுபவத்தை வாய் விட்டு கூற இயலாது.

   .. வாய் விட்டு பேச ஒண்ணாதது ..

.. என்கிற 'வாசித்துக் காணொணாதது' (பாடல் 561) திருசிராப்பள்ளி
- திருப்புகழ் அடியைக் கவனிக்கவும்.

மற்றுமொரு யோகக் குறிப்பும் இதில் காணலாம். அநுபூதி நிலையை
முருகன் அருளால் அடையப்பெற்று மறுபடியும் ஜீவ நிலைக்கு திரும்பி
வரும்போது வாய் பேச முடியாது. பேச்சு திரும்புவதற்கு சில நாட்கள்
ஆவதை சித்தர்களின் வரலாற்றில் காணலாம். எப்போதும்
உள்ளக்களிப்புடன் இருப்பவனும், துன்பம் சிறிதும் இல்லாதவனும்,
எல்லாவித பேறுகளையும்பெற்று அவாப்த சமஸ்த காமனாய்
இருப்பவனும், அடியார்களுடன் மகிழ்ச்சியுடன் சம்பாஷித்துக்
கொண்டிருப்பவனும், பல லீலைகளை புரிபவனும் நீதானே முருகா?
ஆதலால் உன் அருளால் எனக்குக் கிடைத்த இந்தப் பேரானந்த
நிலையை நீயே அனைவருக்கும் எடுத்துக் கூறவேண்டும்.

 

Wednesday, June 24, 2015

விடைகொடு .....

தமிழ் வலைப் பதிவுகளில் புரியாத ஒன்று :

ஒரு இடுகை  தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்ட உரைநடையா அல்லது வழக்கு அல்லது வட்டார /பேச்சு மொழியின் பிரதிபலிப்பா  என்று திடமாக சொல்லிட முடியாது என்பதே.

உரைநடை என்றால் எப்படி இருக்கவெண்டும் என்று ஆங்கில இலக்கியத்தில் பலர் கடந்த 2 அல்லது 3 நூற்றாண்டுகளில் பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் , அவர்கள் சொன்னதெல்லாம், தமிழ் இலக்கியத்திற்குப்பொருந்துமா என இருமொழி வல்லுநர் எவரேனும் தான் சொல்ல இயலும்.

எந்தப்பொருளையும் விளக்க, விரித்துச்சொல்ல, பயன் படுத்தப்படும் இலக்கண சுத்தியுடன் கூடிய வாக்கியங்களே உரை நடை எனப்படுவது ஆகும். எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்றும் மூன்றும் இருக்கவெண்டும். குறைந்தது எழுவாய் பயனிலை ஆவது இருத்தல் அவசியம் என்பர்.

அந்தக்காலத்தில் எனது தமிழ் ஆசிரியர் சொல்வார் :
(நீ) எழுவாய், செயல் படு (இல்லையேல்)  பொருள் இல்லை.என்று நினவு வைத்துக்கொள்ள ஒரு acronym ஆக சொல்வார்.

எந்தப்பொருளையும்பற்றியும் உரை நடை இலக்கியம் இருக்க இயலும். எந்தப் பொருளையும் என்று சொல்லிவிட்டதால், முதல் ஃ  வரை எது வேண்டுமானாலும், நிசமோ, கற்பனையோ, கதையாக, கட்டுரையாக, பெருங்கதையாக, வசன காவியமாக இருக்கலாம்.

இன்று படித்தது சீனு அவர்களின் கட்டுரை ஒரு அழகான உரை நடைக்கு ஒரு உதாரணம் .
அவரது வலை   திடங்கொண்டு போராடு

  தலைப்பு :


விடைகொடு என் ஏர்டெல் ஏகாதிபத்தியமே...

+Srinivasan Balakrishnan

அவர் எழுதியதெல்லாம் ஒரு கைப்பேசி பற்றியே.

 அவருக்கு ஏற்பட்ட சுகத்தை, சோகத்தை, எதிர்பார்ப்பை, அதிர்வுகளை, அச்சங்களை, அவர்தம் நண்பர்களின் சிபாரிசுகளை  அழகாகவே வர்ணித்து இருந்தார்.

ஒரு சிறிய கைக்குள் அடங்கிய ஒரு பொருளை இமயப் பிரச்னை போல வர்ணிக்கும் திறன் சீனுவுக்கே கை வந்த கலை .

படித்து முடித்தபின்  , அந்த இடுகையில் கண்ட விடை என்னும் ஒரு சொல் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருந்தது.

விடை என்ற சொல்லுக்கு எட்டு வகை பொருள் உளது என நன்னூல் கூறும்.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல் - 386)

 இது தவிர, தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. சங்க கால இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களின் பொருள் இன்று காணப்படுதல் அல்லது உணரப்படுதல் கடினம்.

உதாரணம் : இந்த விடை என்ற சொல்லுமே.




தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!


 விடை என்ற சொல்லுக்கு காளை மாடு, அல்லது எருது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஒருவனைப் பார்த்து எருமை மாடு என்றால், வழக்கப்பொருள் என்னவெனின், நாம் என்ன செய்யச்சொன்னாலும் செய்யாது சோம்பேறியாக காலம் தாழ்த்துபவன் எனப் புரிந்து கொள்கிறோம்.

நிற்க. 

ஏர் டெல் காரர்களும் அவ்வாறு தான் . என்ன நாம் கரடியாகக் கத்தினாலும் அவர்கள் விதியே வேறு. நம் விதியை நொந்துகொண்டு நம்மை விட்டால் போதும் என்று ஓடுவதைத்  தவிர வேறு வழிஇருக்கிறதா எனத் தோன்றவில்லை.

சென்ற மாதங்களில் ஒரு போஸ்ட் பைட் சிம்மை நான் ப்ரி பைட் ஆக மாற்ற 
நான் பட்ட பாட்டினை இங்கு விவரித்தால் அது கம்ப ராமாயணத்தில் அசோக வனச் சீதை கதை போல் இருக்கும்.  அவர்கள் கேட்ட எல்லா தொகைகளையும் ஐ.டி. போடோ எல்லாவற்றையும் கொடுத்த பின்னும் அவர்களிடமிருந்து எனக்கு போஸ்ட் பைட் கட்டண அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. நான் போடாத கால்களுக்கு கட்டணம். மாத வாடகை ரூபாய் 350 எப்படியும் செலுத்தவேண்டும் என்கிறார்கள்.  அவர்கள் சொல்லும் காரணம் அந்த ஆண்டவனுக்குத்தான் புரியும். ஆண்டவனே உச்ச நீதி மன்றத்துக்குச் சென்றாலும் இன்று அங்கு இருக்கும் கூட்டத்தில் பெருமாளுக்கு நீதி கிடைக்க பத்து வருடங்கள் ஆகும். 

 எனவே,விடை கிடைக்காது என்ற தோன்றியதால், எது கிடைக்கும் என்று பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

பின்னோட்டம் இடுகையில், இந்த "விடை " எனும் சொல்லை வைத்துக்கொண்டே ஒரு பத்து வரிகள் எழுதினேன்.

விடை கொடு ஏர் டெல் ஏகாதிபத்தியமே !!

டவர் இல்லாத காரணத்தால் ஏர் டெல் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

அதே சமயத்தில், நடுவில், ஏதோ ஒரு டவரின் மேல் உட்கார்ந்து இருக்கும் சிவபெருமான்,
உங்கள் குரல் கேட்டு ,
எனக்கு செல்லிட்டு சொன்னார்:
,

அது என்ன உங்க பிரண்டு கோரிக்கை சரி இல்லையே என்றார்.

அது என்ன அவர் கோரிக்கை உங்களால் தீர்கமுடியாதது என்று வினவினேன்.

நான் அமர்ந்திருக்கும் ஒரே வாகனம் விடை.
அதை கொடு என்றால் எப்படி ?


நியாயம் தான் என்றேன்.

அவரை ஒன்று செய்யச்சொல். என்றார்.

சரி என்றேன்.

அவர் ஆபீஸ் விட்டு வரும் வழியில் க்ரோம்பேட் இருக்கிறது.

ஆம். ஆண்டவா.

அதனருகே நங்க நல்லூர் என்றொரு புண்ணியதலம் இருக்கிறது.

ஆம். அங்கே யாருனாச்சும் ஏர் டெல் ஜி.எம். இருக்காங்களா?

குறுக்கே  பேசாதே. (எங்க அம்மா சொல்லியிருப்பது நினைவில் வந்தது. சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது என்று )


சரி .

அந்த தலத்தில் , ஆஞ்சனேயர் இருக்கிறார்.

ஆமா.அங்கே சென்றால் ??

வடையாவது கிடைக்கும்.

என்று சொல்லி மறைந்தார். அந்த தோடுடைய சிவபெருமான். 

விடையேறியவன்.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com


*******************************************************************************************

Tuesday, June 23, 2015

குதித்தோடி வா

வானதிப் பதிப்பகத்தார் வா வா என
எமை அழைத்து இதைப் படித்துப்பார்,சுவைத்துப்பார்
 என்று சொல்கிறார்கள் என்று தெரியுமுன்னே,

தமிழ் வலை உலக பிரபல பதிவர் எனது நண்பர் பால கணேஷ் அவர்கள், வலை நண்பர்கள் எல்லோரும் நீங்கள் பெருங்காலம் எழுதாது இருப்பது எம்மை எல்லாம் வலிக்கச் செய்கிறது என்று சொல்லி,

முக்கியமாய் சீனு அவர்கள், வேண்டிக்கொண்டதன் பலனாக,

நரசிம்மா அவர்கள் எழுதிய நாவல் பஞ்ச நாராயணக் கோட்டம்
அதிலுள்ள அத்தனை பக்கங்களையும்
சிறப்பெனவே சமன் செய்து சீர் தூக்கிப் பார்த்து, காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்பு தவிர்த்து, நூலின் அருமை குறித்துத் தம் வியப்பையும் எடுத்துக்காட்டி, நாம் 

எல்லோரும் புகழும் வண்ணம் ஒரு விமர்சனம் எழுதி உள்ளார் என்பதை இந்த தாத்தா சொல்லி எல்லோருக்கும் தெரியவேண்டியது இல்லை.

அதைப் படித்த அந்த நாவல் எழுத்தாரரே அதற்கு நன்றி நவிலும் நோக்குடன் ஒரு கடிதம் எழுத அதையும்  பால கணேஷ் அவர்கள் பிரசுரித்து இருக்கிறார்.

இந்தக் கடிதம் வருமுன்னமேயே ஒரு பின்னூட்டம் அளித்த சுப்பு தாத்தா
எப்பவும் போல வாங்கிக்கட்டிக்கொள்ளுவோம் என்று நினைத்தே எழுதிய பின்னூட்டமும் பாலகணேஷ் தந்த பதிலும் இதுவே:
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
.
முதலில் சுப்பு தாத்தா பின்னூட்டம்:


வயசான காலத்துலே கண் சரியா தெரியல்லையா..
அதுனாலே...
அசப்பிலே
சங்க தாரா அப்படிங்கறதை
நயன தாரா ன்னு படிச்சுட்டு, இன்னாடா
இந்த அம்மா கதை, கட்டுரை, நாவல் ன்னு கூட
எழுத ஆரம்பிசுட்டாகளா அப்படின்னு தோனிச்சு..

அப்பறம் தான் கவனிச்சேன்..சங்கத்தாரா அப்படின்னு..

சங்கத்தாரா அப்படி ஒரு ஸ்ரீ லங்கா பேட்ஸ் மேன் இருந்தாரு.

இது வேறவா இருக்கும்.

புத்தகம் கீதா அம்மா கிட்ட கேட்டா கொடுப்பாங்க...வாங்கி படிக்கணும்.

ஆனா, உங்க விமர்சனம் படிச்சதே நாவல் படிச்ச திருப்தி வந்துடுச்சு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை தின்று பார்த்தால் போதுமில்லையா.

ஒரு நல்ல விமர்சனம் கிடைக்க அந்த நரசிம்ம கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.//
நரசிம்ம மட்டும் இல்லை. பதிவுலகில் பல பேர் இந்த குறிப்பைக் கவனித்தால் நல்லது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
ReplyDelete\
பால கணேஷ் அவர்கள் பிரியமுடன் பிரியாணி சாப்பிடும்போது என் பின்னூட்டத்தைப் பார்த்திருப்பார் என்று தோன்றுகிறது
Replies


  1. நீங்களாவது பரவால்ல சுப்புத்தாத்தா. நான் பிரியாணிங்கறதக் கூட பிரியாமணின்னு படிக்கிறவனாக்கும். ஹி... ஹி.. ஹி... சங்கத்தாரா இல்ல இலங்கை பேட்ஸ்மேன், அவர் சங்ககாரா. என் விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

    அடுத்து நூலாசிரியரிடமிருந்து வந்த கடிதம். அதற்கு பால கணேஷ் அவர்கள் விளக்கம்.
நூலாசியரியர் ஆங்கிலத்தில் எனக்கு எழுதி பிரசுரிக்கக் கோரியிருக்கும் கடிதம் இங்கே....

பாலகணேஷ், உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. உங்கள் கருத்துரை இல்லாமல் என் நாவல் முழுமை பெற்றிருக்காது. நான் வியப்புற்றேன். நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர், நான் ஏன் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதும் அறிந்தவர். என் முன்னவர்களைப் போல் வர்ணனைகளுடன் எழுத என்னாலும் இயலும் எனினும் தமிங்கிலீஷ் பேசும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதால்தான் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதைத்தான் என் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய தலைமுறை சரித்திரம் படிக்க வேண்டுமென்பதற்காக நான் கைக்கொண்டுள்ள எழுத்து நடை இது. என் முன்னுரையில் நான் எனக்கு முந்தைய எழுத்தாளர்கள் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என்னைத் தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டு சாண்டில்யனை நான் குறிப்பிட்டதாக எழுதி மற்றவர்கள் என்னை விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் என்னையும் என் எண்ணங்களையும் அறிவீர்கள். என் சீனியர்களைப் பற்றி எழுதுவதன் மூலம் நான் புகழ்தேடிக் கொள்ள முயல்கிறேன் என்று என் புத்தகத்தையும் முன்னுரையையும் படிக்காதவர்கள்கூடக் கூறும்போது அயற்சியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. உங்களுக்கு என் திரையுலகப் பின்னணி தெரியும். நான் புகழை விரும்பியிருந்தால் என் அப்பாவுக்கு உதவியாகத் திரையுலகில் நுழைந்து அதை எளிதாகப் பெற்றிருக்க முடியும். நமது முன்னோர்களின் பெருமையை அறியாதிருக்கும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள விரும்பியே சரித்திரத்தில் நான் கவனம் குவித்து எழுதி வருகிறேன். புகழ் வெளிச்சம் படாத மனிதனாக இருக்கவே விருப்பம்.
என் வேலைப்பளுவின் காரணமாகவும், என் புத்தகத்தைக் கூடப் படிக்காமல் விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என் எழுத்தைச் சோர்வுறச் செய்வதாலும் நான் வருடத்திற்கு ஒரு புத்தகம்தான் எழுதி வருகிறேன். உங்கள் தளத்தில் என் எண்ணங்களையும் என் மூத்த எழுத்தாளர்களை நான் எத்தனை மதிக்கிறேன் என்பதையும் வெளியிடவும். வானதி பதிப்பகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது திரு.கல்கி ராஜேந்திரன், திருமதி.சிவசங்கரி மற்றும் நான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டோம். நான் மூத்தவர்களை அவமதிப்பவனாக அறியப்பட்டிருந்தால் என் பக்கத்து இருக்கையில் கல்கி ராஜேந்திரன் அவர்கள் அமர்வாரா?
எதுவாயினும் உங்களின் விமர்சனம் சிறப்பானது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்ற நாவலை நான் குறைத்தன் காரணமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒற்றுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். தங்கள் அறிவுரைக்கு நன்றி. உங்களின் ஆதரவு வரும் நாட்களிலும் எனக்குத் தொடர்ந்து கிட்டுமென நம்புகிறேன். நன்றி.
Reply

Replies


  1. நரசிம்மா சார்... உங்களை நான் நன்கு அறிவேன். இலக்கண சுத்தமான, வர்ணனைகள் நிறைந்த தமிழில் என்னாலும் எழுத முடியும் என்று குறிப்பிடாமல் உதாரணமாக ஒரு பாரா நீங்கள் எழுதிக் காட்டியதால் எழுந்த நெருடல் அது. அதைப் படிக்கும் மற்றவர்களுக்கு நெருடல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே உங்கள் விளக்கம் வேண்டி அதை இங்கே குறிப்பிட்டேன். அனைவருக்கும் தெளிவாக உங்கள் மனதை இப்போது புரிந்திருக்கும் என்பது என்னைப் பொறுததவரை நல்ல விஷயம். உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டுமே பெருந்தலைகள்.அந்த இடத்தில்
சின்னப் பையன் பொடியன் சுப்பு தாத்தாவுக்கு என்ன வேலை?
இருந்தாலும் சுப்பு
தாத்தா அடிக்கும் ஜால்றாவைக் கேளுங்கள்.

நரசிம்மா அவர்களின்
கருத்துரையே ஒரு
அறுசுவை உண்டி போல
அழகுறத் திகழ்கிறது.

சற்று காரமும் இருக்கிறது.
சுவையான கனி தரும்
இனிப்பும் இருக்கிறது.
சிந்தனைக்கு ஓர்
விருந்தாக இருக்கிறது.


அடுத்த சில நிமிடங்களில்,
டிஸ்கவரி பாலஸ் போகவேண்டும்.
நரசிம்மா எழுதிய நாவலில், அதுதான்,
பஞ்ச நாராயணக் கோட்டத்தில் ஒரு
பாஞ்ச் வரியாவது
இன்றே படிக்கத்துவங்கவேண்டும்.

ஒவ்வொரு எழுத்தாருக்கும்
ஒரு பாணி ஒரு தனித்துவம் உண்டு.
இருப்பினும்,
ஓரிரு இடத்தில் இன்னொருவரை
நினைவு படுத்துதல் என்பதும் இயற்கை தான்.

ஒரு சினிமாவோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது
கேட்கும்போது,
இன்னொரு சினிமாவில் கண்ட காட்சியோ அல்லது
கேட்ட டியூனோ நினைவு வருவது இல்லையா ??


அது போலத்தான்.

சுப்பு தாத்தா.


*******************************************************************************

அடுத்து,
தமிழகத்தின் கவிக்குயிலாய்ப் போற்றப்படும் சசிகலா அவர்களது கவிதையை
எனக்கு முன்பே புலவர்கள் இராமானுஜம், பாரதி தாசன் அவர்கள் சிலாகித்து பாராட்டி எழுதினாலும்,
சசிகலா அவர்களின் உயிர்த் தோழிகள் , நண்பர்கள் பலர் பாராட்டி மகிழ்ந்து விட்டாலும் ,
நன்றாக இருக்கிறதே, என்று ஒரு இரு சொல்லில் பின்னூட்டத்தை முடித்துக்கொள்வாரா சுப்பு தாத்தா ?

குயில் பாட்டு கேட்டிடவே குதித்தோடி வா ..எனத் துவங்கும் இந்தப் பாடல் .

+சசி கலா 

நான் பாடட்டுமா என்று வினயமுடன் கேட்க,
பாடுங்கள் என்று அவர்களும் அனுமதி தர,
அவையினிலே பாடுகிறோம் என்று பெருமிதத்துடன் பாடுவது
இசைச் சிறுவன் சுப்பு தாத்தா.



பாட்டு பாடும்போது நீங்கள் தாளம் போட்டால் அந்தப் பெருமை
மேடம் சசிகலா அவர்களுக்கே  சொந்தம்.

Wednesday, June 17, 2015

அப்பாவும் மகளும். அப்பப்பா !!!

இன்னிக்கு அப்பா மகள் ஒருவருக்கு ஒருவர் ரிலேஷன்ஷிப் அதாவது
உணர்வு பூர்வமான உறவு முறை எப்படி இருக்கிறது என

ஒரு கதை மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
+Subbiah Veerappan
எனது வலை நண்பர் ஜோதிடர் திரு சுப்பையா அவர்கள். அவரது வகுப்பறை என்னும் வலைக்குச் சென்று உடன் இங்கே சென்று அந்தக் கதையை படியுங்கள்.

அதைப் படித்து விட்டு சிரித்து சிரித்து சிரிப்பதை நிறுத்த முடியாமல், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் சுப்பு தாத்தா பொறுப்பல்ல.

இன்னொரு அப்பாவும் மகளும் இங்கே .  அப்பப்பா
நமக்குத் தெரிந்தவர்கள் தான்.

அன்புள்ள அப்பா

Monday, June 15, 2015

கருப்பை வெள்ளையாக மாற்றும்

வணக்கம் தாத்தா பாட்டி நலம் தானே!
இம்முறை பாடல் இன்னும் அழகாக வந்திருக்கிறது தாத்தா எப்படி நான் நன்றி சொல்வேன் என்று தவிக்கிறது மனம். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மிக்க நன்றி உங்கள் கருணைக்கு. பைந்தமிழ் என்னில்ஓர் பாகமா


 இதைப் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். இதை சுப்பு தாத்தாவின் குரலில் கேட்க ஆசையாக உள்ளதாக ஊமைக்கனவுகள் viju வும் கேட்டிருந்தார்.

 எனக்கும் ஆசையாக உள்ளது.

 (click above.) கிளிக்குங்கள் மேலே )

நான் vacation ல் நிற்கிறேன் அமெரிக்காவில்

அதனாலேயே தாமதம். குறை நினைக்க வேண்டாம். மேலும் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்படிக்கு இனியா

 இனியா

 sury Siva 7:53 AM (1 minute ago) to Iniya

 மேடம் இனியா அவர்களுக்கு, வணக்கம். 
உங்கள் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கும் காலையிலே நீங்கள் சென்னையிலோ அல்லது நம் தமிழகத்தின் எங்கோ ஒரு ஊரில் இருப்பதாகத்தான் நினைப்பேன். நீங்கள் தங்களை ஏழ் கடலுக்கும் அப்பால் இருப்பதாகக் குறிப்பிட்ட பொழுது நான் நினைத்தேன்.எண் திசைகளில் நம் தமிழ் மக்கள் வாழ்ந்திடினும் அவர்களை எங்கனம் தமது தமிழ் ஒரு வட்டத்தக்குள் இல்லை ஒரு கோட்டுக்குள் அதுவும் இல்லை ஒரு புள்ளிக்குள் நிறுத்துகிறது, அது மட்டும் அல்ல, அவர்கள் உள்ளங்களை அத்தமிழ் கவிதைகள் இசையின் நமது பாரம்பரிய இசையில் மயங்கச் செய்கிறது என்பதை .நினைந்து கண்கள் பனிக்க உருகி நிற்கிறேன். தமிழ் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு அதுவும் மரபுக் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்புக்கள் பல தங்களைப் போன்றவர்களுக்கே அதிகம் உள்ளன. ஒரு இராமனுஜம், ஒரு பாரதிதாசன், மட்டும் இப்பணியில் பாடு படுகின்றனர். அவ்வப்போது அன்பர் சிவகுமாரன் பணியும் போற்றத்தக்கதே. ஆயினும் இவர்கள் மட்டும் போதாது. ஒரு தமிழினமே இதற்கான தொண்டைச் செய்யவேண்டும். நிற்க. தங்கள் கவிதைகள் எப்பொழுதுமே சொற்சுவை பெரிதும் கொண்டவை. தாங்கள் சாயி கவிதைகள் எழுதி அவற்றினை பாடியபொழுது நான் பெற்ற இன்பம் சொல்லிட இயலாது. இன்னும் எழுதுங்கள். உங்கள் பணி தொடர, சிறக்க , வான் அளாவி நின்று புகழ் பெற உங்களுடன் இறைவனின் ஆசிகள் என்றும் இருக்கும். நன்றி. சுப்பு தாத்தா. சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுத்திட வேண்டும்

. இவருக்காக நான் பாடிய பாடல் இதோ.  

துவக்கத்தில் பகுதாரி . முடிகையில் பாமினி 

இளைய ராஜா, இசை ஞானி அவர்களின் பாடல், 
பார்த்த விழி பார்த்த இடம்.பாடல் நினைவு இருக்கிறதா.
அற்புதமான பாடல். குணா என்னும் படம். 
கமல் சாரின் அற்புத நடிப்பு.

பாடலின் இறுதி பாக்கள். பாமினி @ கும்பினி எனும் ராகத்தில் உள்ளது. 

http://soundcloud.com/meenasury/iniyaamerica


அடுத்து, 

குழல் இன்னிசை பதிவு. 
பதிவர் யாதவன் நம்பி எனவும்
புதுவை வேலு எனவும் வளைய வரும் சொல் வள்ளல் பதிவாளர் அவர்களது 

வெண்ணிலவு கவிதை நான் தேஷ் ராகத்தில் பாடினேன்